tamilnadu

“என் காயம் பெரிதல்ல; ஜனநாயகம் காயப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும்”

இது மேற்குவங்கத்தில் ஜனநாயகம் படும்பாட்டிற்கு சாட்சியம்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவர் கௌதம் மித்ரா, அவரின் இணையர், மகன் வாக்களிக்க சென்றுள்ளனர். 15 திரிணாமுல் குண்டர்கள் தடுத்துள்ளனர். மீறி சென்ற போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.கௌதம் மித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான சுனில் மொய்த்ரா அவர்களின் மகன்.இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவர் நெஞ்சில் தாக்கியுள்ளார்கள். இடது கண்ணுக்கு கீழே காயம். இணையருக்கு கைகளில் அடி. காயம். மகனும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.அவர் முக நூலில் இதைப் பதிவு செய்துள்ளார். “எங்களுக்கு ஏற்பட்ட காயம் பெரிதல்ல; ஜனநாயகத்தை காயமின்றி காப்பாற்ற வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.